Tuesday, May 6, 2014

உல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்!

நோ டென்ஷன்

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  திட்டமிடுதல்தான் டென்ஷனைக் குறைக்கும். போகும் ஊர்களைப் பற்றிய விவரங்கள், எந்த நேரம் போவது வசதி, சுவாரஸ்யத் தகவல்களை சேகரித்துக்கொள்ளுங்கள். அரிய ஊர்களுக்குப் போயும், முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியாமல் போகும்போது, மனச் சோர்வடைய நேரிடலாம்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  தொலைதூரப் பயணங்களுக்கு, முடிந்த வரை காரில் செல்வதைத் தவிர்த்து ரயிலில் செல்வது பாதுகாப்பானது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  வெளியூருக்குக் கிளம்பும் முன்பு, கேஸ் இணைப்பு, மின் இணைப்பைத் துண்டிருத்திருக்கிறோமா, குழாய்களை மூடி இருக்கிறோமா, கதவைப் பூட்டியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபாருங்கள். இல்லையெனில், பயணிக்கும்போது, பலவித சந்தேகங்களால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதுவே மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

மிதமான உணவு

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  அந்தந்த ஊருக்கு ஸ்பெஷல் உணவு இருக்கும். அதை சுவைத்துப் பார்ப்பது வித்தியாச அனுபவம் என்றாலும், வழக்கத்தைவிட சற்றுக் குறைவாகவே எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதால் வாந்தி, அஜீரணம், வயிற்றுப்போக்கு வருவதைத் தவிர்க்கலாம்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg   அலைச்சலால், உடலில் உள்ள நீர்ச்சத்து பெருமளவு இழக்கப்படும். அதிகப்படியான நீர் இழப்பால் நா வறட்சி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் வரலாம். வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, பழங்களைச் சாப்பிட்டும் நீர் இழப்பை ஈடு செய்யலாம். காய்ச்சி வடிகட்டிய நீரை அதிகம் அருந்துவது பாதிப்பிலிருந்து மீள வழி செய்யும்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  சிலருக்கு வண்டியில் ஏறிய சிறிது நேரத்திலேயே, வாந்தி, மயக்கம், வயிற்றுப் புரட்டல் ஏற்படலாம்.  இஞ்சித் துண்டுடன், சீரகத்தூள், உப்புத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து எடுத்துச் செல்லுங்கள்.  
http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg   காலை 11 மணி அளவில் இளநீர், நீர் மோர் அருந்துவது நல்லது.  மதிய நேரத்தில் சாப்பாட்டுடன் வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் சேர்த்த ரைத்தா, பச்சடி சாப்பிட்டால் உடலும் வயிறும் கூலாக இருக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg   ஆங்காங்கே கூல்டிரிங்ஸ் வாங்கி குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். சர்க்கரை சேர்த்த எலுமிச்சைச் சாறு, நீர்மோர் அருந்துவது நீர்க் கடுப்பு, நீர்ச் சுருக்கு வராமல் தடுக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  எங்கு உணவு சாப்பிட்டாலும், வெந்நீரைப் பருகுங்கள். வெந்நீர் தொண்டையைப் பாதிக்காது. சளி பிடிக்காது. மினரல் வாட்டரைவிடச் சிறந்தது. செலவும் மிச்சம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg  எண்ணெய், மசாலா உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற வெந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இதனால், மலச்சிக்கல், வயிற்று உப்புசம் பிரச்னை இருக்காது.   

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பெரும்பாலும் அசைவ உணவைத் தவிர்த்து, சைவ உணவு அதுவும் இயற்கை உணவுதான் பெஸ்ட். வயிற்றுப் பொருமல், அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம்.
மாசுக்களிலிருந்து தப்பிக்க...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg அதிகப்படியான தூசுக்களால் தலைமுடியும், சருமமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். முடி உதிர்வது, வலுவிழத்தல், சிக்கு படிதல், பொலிவிழந்து போகும். வழக்கமாக பயன்படுத்தும், தரமான ஷாம்பு, கண்டிஷனர்களை கையோடு எடுத்துச் செல்லுங்கள்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பனி பொழியும் இடங்களில் தலைக்கு ஸ்கார்ஃப் அணியலாம். சிலர் வெயிலில் செல்லும்போதும் தலைக்கு ஸ்கார்ஃப் போடுவார்கள்.  இதனால், தலையில் சிலருக்கு அதிகம் வியர்க்கும், முடி உதிரும். இவர்கள், ஸ்கார்ஃப் அணிவதைத் தவிர்த்து, காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளலாம். பயணத்தைத் தொடங்கும் முன்பு தலைக்கு நன்றாகக் குளித்துவிட்டு, முடி காய்ந்ததும் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யலாம். வண்டியில் பயணிக்கும்போது, தலைமுடி பறப்பதையும், தூசுக்கள் படிவதையும் தவிர்க்கலாம்.

உடல் உஷ்ணம் குறைய...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg எண்ணெய், அதிகக் கடினப் பொருட்கள் மசாலாக்கள் சேர்த்த உணவுகளை சாப்பிடுவதாலும் அஜீரணம், வாயுத் தொல்லை ஏற்படும். வாயுத் தொல்லையாலும், ஓய்வின்றி ஊர் ஊராகச் செல்வதாலும்கூட உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம். உடனடியாக ஜீரணக்கோளாறைச் சரிசெய்வது நல்லது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவி தலைக்குக் குளிப்பதன் மூலம் உஷ்ணம் தாக்காமல் காக்கலாம்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg மோர், இளநீர், பழச்சாறுகள் உஷ்ணத்தைக் குறைக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வெயிலின் உஷ்ணத்தால் சருமம் சூடாகிவிடும். இதைத் தடுக்க, அடிக்கடி கர்ச்சீப்பை தண்ணீரில் நனைத்து அடிக்கடி கை, முகம், கால்கள், கழுத்து போன்ற அனைத்து இடங்களிலும் ஒத்தி எடுக்கலாம். இதனால், தோல் வறட்சி, படிந்த அழுக்கும் நீங்கி, குளிர்ச்சியாக இருக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg உஷ்ணம், தூக்கமின்மை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்பட்டுச் சிவக்கலாம். நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை போன்ற ஃப்ரெஷ் பூக்களைக் கண்களில் வைத்து துணியால் கட்டிக்கொள்ளலாம். நல்ல குளிர்ச்சியைத் தரும்.

வலியிலிருந்து விலக...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பஸ், காரில் பயணிக்கும்போது, கை, கால்களை மடக்க முடியாமல் ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். அவ்வப்போது எழுந்து, கால்களைச் சுழற்றுவதும், கைகளை சோம்பல் முறிப்பதும், காலைத் தூக்கியபடி வைத்துக்கொள்வதுமாக சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்யலாம். இதனால், வலிகள் இருக்காது. நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். வீக்கம் ஏற்படாது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பிரயாணக் களைப்பால் கால் வலி அதிகம் இருக்கும். வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து கால்களை நனைப்பதன் மூலம் பாத வலி பறந்துபோகும்.

பாதுகாப்பு

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg மலை ஏறும்போது, காது அடைப்பதுபோல, குத்துவலிபோல ஏற்படலாம்.  வாயில் ஏதேனும் சாக்லேட் மென்றுகொண்டே செல்வதன் மூலம், இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வெயில் கொளுத்தும் இடமாகச் செல்வது என்றால், பருத்தி ஆடையை அணிந்து செல்லுங்கள். அதுவும் தளர்வாக இருக்கட்டும். அதீத வியர்வை, உடல் சோர்வைத் தடுக்கும்.  குளிர் பிரதேசத்துக்கு செல்வதாக இருந்தால், ஸ்வெட்டர், மங்கி கேப், மஃப்ளர் போன்றவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பிளாஸ்டிக்கினால் ஆன செருப்பு, ஹீல்ஸ் அணிவதைத் தவிர்த்து, வசதியான பக்கிள்ஸ் வைத்த செருப்பை அணிவது நல்லது. இதனால் குதிகால், கெண்டைக்கால் வலி வராமல் இருக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பயணிக்கும் வாகனத்தின் குஷன் சீட்டில் அமர்ந்து நெடுநேரம் பயணிக்கும்போது உட்காரும் இடத்தில் உஷ்ணக் கட்டி, பைல்ஸ் வருவதைத் தவிர்க்க, சீட்டின் மேல் பருத்தித் துண்டை விரித்து உட்காரலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பயணிக்கும் குடும்ப உறுப்பினர் அனைவரிடமும், உங்களது செல்போன் நம்பர், டிக்கெட் ஜெராக்ஸ், ரசீது, முகவரிகளைக் கொடுத்து வையுங்கள். சமயத்தில் கை கொடுக்கும். காணாமல் போனாலும், சட்டென அவர்களைத் தேடி இணைவதில் சிரமம் இருக்காது.


கையோடு பையில்...

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg அதிக அலைச்சல் மலச்சிக்கலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு 20 காய்ந்த திராட்சைகள் சாப்பிட்டால், காலையில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சீரகத்தை தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து குளிப்பது உஷ்ணம், அலைச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வைத் தடுக்கும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg ஒரு பாக்கெட் வெந்தயத்தை வாங்கி எடுத்துச் செல்லுங்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில், தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பருப்பு பொடி, ஊறுகாய், தக்காளித் தொக்கு, புளிக்காய்ச்சல் என்று தயார்செய்து செல்வதன் மூலம் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட ஃபீல் இருக்கும்.  

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg மிளகு சீரகப் பொடி, பருப்புப் பொடி, சுண்டைக்காய்ப் பொடி, புளிக்காய்ச்சல், பொரித்த வடகம் என சில உணவுகளைத் தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. சரியான உணவு கிடைக்காத இடங்களில், வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்லது.  உடலுக்கும் உபத்திரவம் தராது.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg பிரயாணத்தின்போது சிலருக்கு வாந்தி வரலாம். புளிப்பான எலுமிச்சம்பழம், மாங்காய், ஆல்பகோடா பழம், இஞ்சி மரப்பா இவற்றை எடுத்துச் செல்லலாம். பஸ், கடல் விமானத்தில் பயணிப்பவர்களுக்கென, ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவு இல்லாத 'காக்குலஸ்என்ற மருந்து இருக்கிறது. இதை பயணத்தின்போது கையில் வைத்திருக்கலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg தொப்பி, குடை, கூலிங்கிளாஸ், சன் ஸ்க்ரீன் லோஷன், ஆலுவேரா ஜெல் கிரீம், குக்கும்பர் ஜெல் கிரீம் வாங்கி எடுத்துச் செல்வதன் மூலம் வெயிலின் நேரடித் தாக்குதல் ஏற்படாமல் காக்கலாம்.

http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வெகு தொலைவுப் பயணம் எனில், முதியோர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் அழைத்துச் செல்லாதீர்கள். அப்படியே விரும்பி அழைத்துப் போனாலும், அவர்களுக்கான மருந்து மாத்திரைகள், டானிக் வகைகள், டாக்டரின் மருத்துவ சீட்டு இவற்றையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். குளுகோஸ், வலி நிவாரணத் தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.


http://www.vikatan.com/doctor/2014/05/mtknjg/images/dot(3).jpg வழக்கமாக நாம் பயன்படுத்தும் சோப், பவுடர், கிரீம் வகைகளைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். மாற்று பிராண்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அலர்ஜியைத் தவிர்க்க இது உதவும்.

-நன்றி டாக்டர் விகடன், 16.05.2014

Friday, November 1, 2013

Happy Diwali




May Millions Of Lamps Illuminate your Life
With Endless Joy, Prosperity,
Health & Wealth Forever
Wishing you And your Family A Very
Happy Diwali

Friday, October 4, 2013

சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்!




உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால், அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. சுவையாக இருக்கிறது என்று அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரிக்காயை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். அது சரியல்ல... பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம். 

'நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது!

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். இதிலுள்ள 'பாலி அன்சாச்சுரேட் அமிலம்செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கதலில் இருந்தும் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.


பேரிக்காய் மட்டுமல்ல, பேரிக்காய் மரத்தின் பட்டையும் கூட மருத்துவப் பயன்மிக்கதுதான்! பேரிக்காய் மரப் பட்டை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பட்டையைக் களிம்பாக்கி தசை பிடிப்பு, தசை வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்தால் வீக்கம் குறையும்.

பேரிக்காயில் நிறைய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நாட்டுப்பழங்களை உண்பது மிகவும் சிறந்தது. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம்' என்றார்


-நன்றி டாக்டர் விகடன்

Thursday, August 15, 2013

Independence Day India 2013


Independence Day India 2013 marked by a Google doodle

Independence Day India is the subject of Thursday's Google doodle, on the occasion of India's 67th Independence Day. The doodle depicts a tricolour ribbon, in the colours of the Indian flag - saffron, white and green.

15th August is celebrated as Independence Day across India to mark the day that the country declared its independence from the British rule, sixty-six years ago. India was born as a sovereign nation on 15 August 1947, at the stroke of midnight, after nearly two centuries of rule by the British.

The East India Company start ruling India after it defeated the Nawab of Bengal and his French allies in the Battle of Plassey in 1757. The company ruled India for hundred years, before it was forced to hand over the reigns to the British Crown after the first revolt of Indian Independence in 1857.

The British Crown assumed direct control of India in 1858, and passed a series of stricter, repressive laws that broke the proverbial back of the local population. Unrest against the British Empire started rising, and the arrival of Gandhi from South Africa gave the movement a much needed focal point.

Gandhi became the symbol of the Independence movement, which was built upon the ideas of non-violence, civil disobedience and non-cooperation. The movement hit an upsurge during the late 1930s, and early 1940s, with India frustrated at being dragged into the World War II, and pressing for a full independence from the Empire, after earlier calls for partial self-rule.

Beaten down by the World War II, and the movement within India that was now at its peak, the British Government finally decided to end the British rule in India. 




Sunday, May 19, 2013

பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்


பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு விண்ணப்பம்



2013-2014-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி / அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பு (B.E. / B.Tech.) சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியல் கல்லூரி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் 21.5.2013 முதல் 12.6.2013 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

1.
அரியலூர்: யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், அரியலூர் 621713

2.
சென்னை: தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600025

3.
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, புரசைவாக்கம், சென்னை 600012

4.
கோயம்புத்தூர்: அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641013

5.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641014

6.
கடலூர்: முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணாமலை நகர் 608002

7.
தருமபுரி: தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு 636808. - உள்ளிட்ட 34 கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து கல்லூரியின் விவரங்கள் இங்கே காணலாம்.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300/-க்கான கேட்பு வரைவோலையினை (Demand Draft 19.5.2013-க்கு பின் பெறப்பட்ட வகையில்) "The Secretary, Second year B.E. / B.Tech. Degree Admissions 2013, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi – 630 004" என்ற பெயரில் காரைக்குடியில் காசாக்கும் வகையில் (Payable at Karaikudi) எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), பட்டியல் / பழங்குடி (SCA/SC/ST) இனத்தவர், விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ள, சான்றிடப்பட்ட சாதிச் சான்றிதழின் நகலை (Attested Xerox copy of SCA/SC/ST Community Certificate) ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் “The Secretary, Second year B.E. / B.Tech. Degree Admissions 2013, ACCET, Karaikudi – 630 004” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 12.06.2013 மாலை 5:00 மணி.

நேரடி இரண்டாமாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூன் 2013 கடைசி வாரத்தில் "அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடியில்" நடைபெறும். 

இதற்கான அழைப்புக் கடிதம் (Counselling call letter) உரியவர்கட்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தொழில் நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.