Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Monday, September 5, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன்


மாதா, பிதா, குரு, தெய்வம் –
ஆசிரியர்களை முன்றாம் இடத்தில் வைத்து தெய்வத்திற்கும் மேலாக மதிக்கிறோம். 

இன்று ஆசிரியர்கள் தினம்.
ஒவ்வொரு மாணவனும் தன்னை உருவாக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லும் நாள். ஆசிரியர்களும் மாணவர்கள் மனதில் இடம் பிடித்து அவர்கள் நாட்டினை மேம்படுத்தும் நல்ல குடிமகனாக உருவாக்கும் அளவிற்கு தம்மை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கும் நல்ல நாள்.

என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் கை பிடித்து தூக்கி விட்டு இன்றைக்கும் வழி நடத்திக் கொண்டிருக்கம் எனது கிராம பள்ளிக்கூட ஆசிரியப் பெருமக்களுக்கு எப்படி நன்றி சொல்வது.
நானும் அவர்களைப்போல கற்றதை பிறருக்கு கற்பிப்பதுதான் அவர்களுக்கு சொல்லும் நன்றி என நினைக்கிறேன். 
இந்த இனிய நாளில் அவர்களின் வாழ்த்துக்களுக்காக 
தலை வணங்கி நிற்கிறேன்.