Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Sunday, March 3, 2013

+2 தேர்வுகள்


+2 தேர்வுகள் ஆரம்பித்துவிட்டது, 
பெற்றோர்களே உங்கள் பங்கு முக்கியம்.



குழந்தைகளின் பயத்தைப் போக்கணும்
கவலைப்படாதே, நாங்கள் இருக்கிறோம். உலகம் பெரியது. படிப்பும், பரீட்சையும் அதில் ஒரு அங்கம். அதனால் பதற்றம் அடையாதேன்னு ஆறுதல் வார்த்தைகள் சொல்லணும். குழந்தைகள் புரிஞ்சுக்குவாங்க. அப்பவே பாதி வெற்றி கிடைச்ச மாதிரிதான்.

தொந்தரவு வேண்டாம்
தொந்தரவு ஏதுமின்றி அமைதியான சூழ்நிலை இருந்தாலே போதும். அதுவே வெற்றிக்கு வழி. சிந்தனையும் செயலும் ஒன்றாக இருப்பதற்கு தனிமை அவசியம். அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள்.

உடன் இருங்கள்
வேலை நிமித்தம் வெளியூரில் இருந்தால் தவிர்த்து விட்டு , குழந்தையின் அருகாமையில் இருப்பது அவசியம். பெற்றோர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதே பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

எளிய உணவு
பொறித்த உணவுகளைத்தவிர்த்து, எளிதில் செரிக்கும் சைவ உணவுகளை தரவேண்டும். நொறுக்கு தீனி வேண்டாம். காய் கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டும். தாரளமாக நீர் அருந்துவது நல்லது.

இரவில் நல்ல ஓய்வு எடுத்த பின்னர், அமைதியாக, தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
வாழ்த்துக்கள்.


பிளஸ் 2 தேர்வு அட்டவணை

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிகிறது.

மார்ச் 1        மொழித்தாள் 1
மார்ச் 4   மொழித்தாள் 2
மார்ச் 6   ஆங்கிலம் 1
மார்ச் 7   ஆங்கிலம் 2
மார்ச் 11   இயற்பியல், பொருளியல்
மார்ச் 14  கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு
மார்ச் 15  வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 18  வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 21  உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 25 தொடர்பு ஆங்கிலம், இந்தியபண்பாடு, கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழிப் பாடம் தட்டச்சு
மார்ச் 27    அரசியல்அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்பாட எழுத்து தேர்வுகள்