On World Polio Day, 24 October, Rotarians around the globe show their support for ending the disease, which still strikes young children in Asia, Africa, and the Middle East.
Monday, October 24, 2011
ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒற்றுமையாய் தீபத்திருநாளை கொண்டாடுவோம்.
Friday, October 21, 2011
Saturday, October 1, 2011
நிம்மதி.. நிம்மதி..
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) அண்மையில் இந்தியாவில் எஸ்.எம்.எஸ் துறையில் புதிய விதிகளை வெளியிட்டது.
இந்த கட்டுப்பாடுகள் நுகர்வோருக்கு உத்தியோகப் பூர்வமற்ற வர்த்தக SMS அனுப்புவதை தடுத்து வடிவமைக்கப் பட்டுள்ளன.
செப்டம்பர் 27 2011, முதல் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் சேவை வழங்கும் நிறுவனமும் புதிய TRAINCPR (தேசிய வாடிக்கையாளர் விருப்பம் பதிவு NCPR)) வழிகாட்டுதல்கள் படி நடந்து கொள்ள வேண்டும். புதிய TRAI வழிகாட்டுதல்கள் பற்றி மேலும் விவரங்களுக்கு www.nccptrai.gov.in தளத்தினைப் பார்க்கவும்.
இணைய வழி SMS துறையில் முதன்மையாக விளங்கும் way2sms செப்டம்பர் 27 முதல் TRAI விதிமுறைகளை பின்பற்றுகிறது.
- இனி பதிவு செய்யப்பட்ட (DND) மொபைல் எண்களுக்கு இணைய வழி SMS வழங்க முடியாது. அந்த சமயத்தில் செய்தி அனுப்புபவர்களுக்கு இங்கு காண்பிக்கப்பட்டது போன்ற செய்தி கிடைக்கும்.
- இனி அனுப்புபவர் பகுதியில் TD- 677800 (677800 is the Unique number allotted by Telecom operator to way2sms) என்ற எண் மட்டும் இருக்கும். பின்னர் எட்டு எழுத்துக்களில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் இடம் பெறும்.
- மேலும் TRAI புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை செய்திகள் அனுப்ப இயலாது.
TRAI-ன் புதிய விதிகள் ஒரு வகையில்
நிம்மதி அளித்தாலும் என் போன்றவர்களுக்கு சற்று சிரமம்தான். எப்பொழுதும் இணையத்தின்
வழிதான் குறுஞ்செய்தி அனுப்புவது வழக்கம். பார்ப்போம் ஒரு கதவு மூடினால்
கண்டிப்பாக இன்னொன்று திறக்கும்.
Tuesday, September 27, 2011
கூகுளின் வயது 13
இன்று செப்டம்பர் 27ல் கூகுள் தன் பன்னிரண்டாவது ஆண்டை முடித்து 13 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது.
முதல் பிறந்த நாள்.
1995 – லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.
1996 – பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.
1997 – கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர்-ல்தான், முதல் பிறந்த நாள்.
லோகோ அனைத்தையும் காண:
http://www.google.co.in/logos/
http://www.google.co.in/logos/
Monday, September 19, 2011
கூகுள் தரும் புதிய வசதி
நீங்கள் இதுவரை கூகுள் மேகக் கணிணியில் உங்கள் கோப்புகளை
சேமித்து வைத்து இருப்பீர்கள். மிகவும் வசதியாகவும், தேவைப்பட்ட இடத்தில் பார்க்கும்
வசதியையும் அனுபவித்து இருப்பீர்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தும்
இருப்பீர்கள். இப்பொழுது அதனை இன்னும் மேம்படுத்தி கோப்புறைகளையும் சேமிக்கவும்
வழி செய்து இருக்கிறது.
மேல் உள்ள படத்தில் அந்த வசதியை நீங்கள்
காணலாம்.
மேலும் தெரிந்துகொள்ள:
Monday, September 5, 2011
எழுத்தறிவித்தவன் இறைவன்
மாதா, பிதா, குரு, தெய்வம் –
ஆசிரியர்களை முன்றாம் இடத்தில் வைத்து தெய்வத்திற்கும் மேலாக மதிக்கிறோம்.
இன்று ஆசிரியர்கள் தினம்.
ஒவ்வொரு மாணவனும் தன்னை உருவாக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லும் நாள். ஆசிரியர்களும் மாணவர்கள் மனதில் இடம் பிடித்து அவர்கள் நாட்டினை மேம்படுத்தும் நல்ல குடிமகனாக உருவாக்கும் அளவிற்கு தம்மை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று சிந்திக்கும் நல்ல நாள்.
என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் கை பிடித்து தூக்கி விட்டு இன்றைக்கும் வழி நடத்திக் கொண்டிருக்கம் எனது கிராம பள்ளிக்கூட ஆசிரியப் பெருமக்களுக்கு எப்படி நன்றி சொல்வது.
நானும் அவர்களைப்போல கற்றதை பிறருக்கு கற்பிப்பதுதான் அவர்களுக்கு சொல்லும் நன்றி என நினைக்கிறேன்.
இந்த இனிய நாளில் அவர்களின் வாழ்த்துக்களுக்காக
தலை வணங்கி நிற்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)







